செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

கலை

வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்

கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 07:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று,  தமிழ் தேசியத்தையும் தமிழ்மொழியையும் தம் சுவாசமாகக் கொண்டு ஈகங்கள் புரிந்தோரை  இதயங்களிற் சுமந்தவாறு 09:30  மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு,

மேலும் »
செய்திகள்

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023/2024

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம், தனது நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வை 27.01.2024

மேலும் »
கலை

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை

வெற்றுக்கரங்களோடு தாயகத்தை விட்டுத் திசைதெரியாது புலம்பெயர்ந்தபோது, தமிழருடன் கூடிப்பயணித்த மொழியையும் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அமுதசுரபியாகத் துலங்கும் தமிழாலயங்கள், தமிழ் மரபுத் திங்களைச் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றன. தமிழர் நிலத்தின் பண்பாட்டுப்

மேலும் »
ஆண்டுவிழா

10ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் பென்ஸ்கைம்

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 10.02.2013 அன்று பென்ஸ்கைம் தமிழாலயம் தொடங்கப்பட்டது. பென்ஸ்கைம் நகரிலும் அதனை அண்டியுள்ள நகரங்களிலும் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு மரபுகளையும்

மேலும் »
செய்திகள்

தமிழ்த்திறன் போட்டி 2023 – மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத் தெரிவுப் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இப்போட்டியில் போட்டியிட்ட போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டாம்

மேலும் »
கல்வி

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான

மேலும் »
ஆண்டுவிழா

16ஆவது அகவை நிறைவு விழா – தமிழாலயம் றேகென்ஸ்பூர்க்

மொழியைப் பாதுகாப்பதனூடாகவே எமது இனத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க முடியும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் தூரநோக்குச் சிந்தனையினால் உருவானதே தமிழ்க் கல்விக் கழகமும் அதன் கீழியங்கிவரும் தமிழாலயங்களும். அத்தமிழாலயங்களில் ஒன்றான றேகென்ஸ்பூர்க் தமிழாலயம் தமிழ்மொழியையும்

மேலும் »
செய்திகள்

உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் மதிப்பளிப்பும்

தமிழீழம், கிளிநொச்சி ஜெயந்தி நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனி சீர்ஸ்பூர்க் நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும் டில்லிங்கன் தமிழாலயத்தில் 19ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகத் தமிழ்ப் பணியாற்றிய உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் சென்ற 09.10.2023

மேலும் »
ஆண்டுவிழா

30ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் அவுக்ஸ்பூர்க்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கிவரும் 110 தமிழாலயங்களில் ஒன்றான அவுக்ஸ்பூர்க் தமிழாலயம், கடந்த 30 ஆண்டுகள் அவுக்ஸ்பூர்க் நகரில் வாழ்ந்துவரும் தமிழ்ச்சிறார்களுக்குத் தாய்மொழியையும் கலை,பண்பாட்டையும் கற்பித்து வருகின்றது. புலம்பெயர் நாட்டில் 30

மேலும் »
ஆண்டுவிழா

16ஆவது அகவை நிறைவு விழா – தமிழாலயம் ராடொல்வ்செல்

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான ராடொல்வ்செல் தமிழாலயம் 16ஆவது அகவை நிறைவு விழாவை 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்புறக் கொண்டாடியது. ராடொல்வ்செல் லொலிபொப் குழந்தைகள் பண்பாட்டு மையத்தின் நிர்வாகி திரு.குலெர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்

மேலும் »