எம்மைப்பற்றி

எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கவிளைவுகளால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் புகலிடம் தேடிய தமிழீழத் (ஈழம், இலங்கை) தமிழர்கள் நாம்.

யேர்மனியில் பிறந்து வளரும் எமது பிள்ளைகள், எமது தாய்மொழியையும், பண்பாட்டையும் கற்கவேண்டுமென்ற உயர்ந்த இலக்குடன் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகத் தமிழர் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். 2004ஆம் ஆண்டிலிருந்து அவ்வமைப்பு தமிழ்க் கல்விக் கழகம் என்ற பெயருடன் 100ற்கு மேற்பட்ட நகரங்களில் “தமிழாலயம்” என்ற தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றது.

எமது வரலாறு

1990
உலகத் தமிழர் இயக்கம் 1990இல் பொன் நகரத்தில் திரு. நமசிவாயம் சுரேந்திரகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்டது. இம் மன்றத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றான தமிழ்மொழி கற்பிக்கும் பணிக்காக யூக்சன் நகரத்தில் முதலாவது "தமிழாலயம்" என்ற பள்ளியைத் தொடக்கிவைத்தது. அவ்வாண்டிலே யேர்மனி முழுவதிலும் பன்னிரண்டிற்கு மேற்பட்ட தமிழாலயங்கள் தொடக்கிவைக்கப்பட்டது. முதற் பத்து ஆண்டுகளுக்குள் நாடுமுழுவதிலும் 95க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் உருவாக்கப்பட்டன.
1990
1992
மாணவர்கள் தமிழாலயங்களில் கற்கின்ற மொழியாற்றலைக் கணிக்கின்ற அளவுகோலாகத் தமிழ்த்திறன் போட்டி என்ற செயற்றிறன் உருவாக்கப்பட்டது.
1992
2000
2000ஆம் ஆண்டில் ஸ்ருற்காட் நகரிலே முதலாவது நடுவச் செயலகம் உருவாக்கப்பட்டது. முதற் பத்து ஆண்டுகளுக்குள் நாடுமுழுவதிலும் 95க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் உருவாக்கப்பட்டன.
2000
2004
தேவைகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் உலகத் தமிழர் இயக்கம் என்று இயங்கிவந்த இவ்வமைப்பு “தமிழ்க் கல்விக் கழகம்“ எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.
2004
2012
தமிழாலயங்களில் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் பணியாற்றியோருக்கு “தமிழ் வாரிதி“ என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
2012
2015
தமிழாலயங்களில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணியாற்றியோருக்கு “தமிழ் மாணி“ என்ற உயர்பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
2015
2017
தொடக்கத்தில் இருந்து தமிழாலயங்களில் தமிழ்க் கலைகளைப் பயின்றே வருகின்றனர். அவர்களின் கலைத்திறனைக் கணிக்கின்ற அளவுகோலாகக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.
2017
இன்று
இன்று எமது நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களைத் தொடங்கி, அங்கு கல்வி பயின்றுவரும் 5000க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் 1500க்கு மேற்பட்ட ஆசிரிய, நிர்வாகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்று