கலைப்பிரிவு
எமது தமிழாலய மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் கற்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தமிழாலய நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளிற் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்காற் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். கலைத்திறன் போட்டி, தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினர் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.
மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்
அடுத்துவரும் நிகழ்வுகள்
மார்ச் 2023
05மார்ச்நாள் முழுவதும்கலைத்திறன் போட்டி - வடமத்திய மாநிலம்நிகழ்வுகள் :கலை
நேரம்
நாள் முழுவதும் (ஞாயிறு)
18மார்ச்நாள் முழுவதும்கலைத்திறன் போட்டி - தென்மேற்கு மாநிலம்நிகழ்வுகள் :கலை
நேரம்
நாள் முழுவதும் (சனி)
புதியவை
புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்
எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம்
புலத்திலே கலைத்திறனில் வாகைசூடும் வளரிளம் தமிழர்கள்
எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான
தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்திய மாநிலம்
எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி, இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது.
கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை.
தமிழர் திருநாளில் வெளியிடப்பட்டுள்ளது வெளிச்சவீடு
தமிழ்த் தேசத்துக்குச் சொந்தமான வள்ளுவர் நாட்காட்டியின் கணிப்பின்படி இன்று 15.01.2023 தைத்திங்கள் முதலாம் நாள். தமிழர்கள் இத்திருநாளில் இயற்கைக்குக் குறிப்பாகக் கதிரவனுக்கு நன்றி சொல்வதுடன், புத்தரிசியில் பொங்கி உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழுதலும் ஆடிப்பாடிக்