கலைப்பிரிவு
எமது தமிழாலய மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் கற்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தமிழாலய நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளிற் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்காற் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். கலைத்திறன் போட்டி, தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினர் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.
மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்
அடுத்துவரும் நிகழ்வுகள்
மார்ச் 2026
21மார்ச்நாள் முழுவதும்கலைத்திறன் போட்டி - தென்மேற்கு மாநிலம்நிகழ்வுகள் :கலை
நேரம்
நாள் முழுவதும் (சனி)
இடம்
Dalberghalle Essingen
Am Turnplatz 12
புதியவை
கலைத்திறனோடு கலைக்களமாடி மகிழும் வளரிளம் தமிழர்கள் – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் வளரிளம் தமிழர்களிடமுள்ள பல்வகை இன்கலைகளின் வினைத்திறனை வெளிக்கொணரும் நோக்கோடு நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் தென்மாநில அரங்காற்றுகை 28.02.2026 சனிக்கிழமை ஸ்ருற்காட் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’
தமிழர் கலைகளின் களமாகக் கலைத்திறன் – முன்சன்கிளாட்பாக்
வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் மத்திய மாநிலத்தின் அரங்காற்றுகை 14.02.2026 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. த.ஒ.குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர்
வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்
வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில்
தமிழாலயங்களின் தமிழர் திருநாள் மகிழ்வு 2026
நன்றியைப் போற்றும் உன்னதமான தமிழர் மரபுவழித் திருநாளாக விளங்கும் தைத்திருநாளைத் தமிழ்க் கல்விக் கழக நிருவாகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்கள் தத்தம் வள வல்லமைக்கிசைவாகக் கொண்டாடி மகிழ்ந்தன. பொங்கலிடல், கலைநிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் எனத்
தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு, புதிய நுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமை பெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல

