தேர்வுப்பிரிவு
தமிழாலய மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மதிப்பீடு செய்வதும் அவர்களை அடுத்த வகுப்புக்குத் தரமுயர்த்துவதற்குமாகத் தேர்வுகள் இருவகையாக நடாத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுக்கான வளப்படுத்தலின் பொருட்டு கல்வியாண்டின் அரைப் பகுதியில் அரையாண்டுத் தேர்வும் இறுதியில்; அறிமுறைத்தேர்வு உட்பட கேட்டல், பேசுதல், வாசித்தல் என்பவற்றை உள்ளடக்கிய புலன்மொழிவளத் தேர்வு இணைந்த அனைத்துலகப் பொதுத்தேர்வும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்படுகின்றன.
அடுத்து வரும் நிகழ்வுகள்
யூன் 2022
புதியவை
அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022 எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை