TBVWebLogo

தமிழ்த்திறன் போட்டி 2023 – மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத் தெரிவுப் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இப்போட்டியில் போட்டியிட்ட போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டாம் நிலையான மாநிலப் போட்டி 09.12.2023 சனிக்கிழமை மாநில மட்டத்தில் அமைக்கப்பட்ட கனோவர், கம், கிறீபெல்ட், லண்டவ், கைல்புறோன் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற்றது.

காலை 09:30 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் தொடங்கிய போட்டியில் 1052 போட்டியாளர்கள் 2624 போட்டிகளில் போட்டியிட்டனர். இப்போட்டிகளை நடுவம் செய்வதற்காகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவால் நடுவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். பயிற்சியும் பட்டறிவும் நிரம்பிய 116 தமிழாலய ஆசான்களும் இளைய ஆசிரியர்களும் இணைந்து ஏற்றுக் கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றி, வெற்றியாளர்களைத் தீர்மானித்தனர். இவர்களுக்குத் துணையாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்கள் செயற்பட்டனர். மாநில மட்டத்தில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் 02.03.2024 நடைபெறவுள்ள நாடுதழுவிய மட்டத்திலான இறுதிப் போட்டியில் பங்கேற்றுத் தமது இறுதிநிலைக்கான வெற்றியைத் தீர்மானித்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X